சித்திரை மாதம் அமாவாசையை ஒட்டிவரும் வளர்பிறை மூன்றாவதுநாள் திரிதியை திதியே அட்சயதிரிதியையாகக் கொண்டாடப்படுகிறது. ‘அக்ஷய’ என்னும் சமஸ்கிருதச் சொல்லே தமிழில் ‘அட்சய’ எனப் படுகிறது. ‘க்ஷயம்’ என்றால் குறைதல். ‘அக்ஷயம்’ என்றால் வளருதல். யுகங்களில் இரண்டாவதான திரேதாயுகம் தொடங்கிய நாள் இதுவே. இந்நாளில் நற்செயல்கள் தொடங்கினால் வெற்றிபெறும்.