பதிவு செய்த நாள்
17
ஏப்
2018
05:04
கிள்ளை: கிள்ளை அருகே ராதாவிளாகம் உத்திராபசுபதியார் கோவிலில் 109 ம் ஆண்டு அமுது படையல் விழா வெகு விமர்சியாக நடந்தது. சுற்று பகுதியினர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கிள்ளை அருகே ராதாவிளாகம் உத்திராபசுபதியார் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் துவக்கத்தில் அமுது படையல் நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடந்தது வருகிறது. இந்த ஆண்டிற்கான விழா கடந்த 15 ம் தேதி காலை கொடி ஏற்றி காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. 16 ம் தேதி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார நிகழ்ச்சியும், இன்று 17 ம் தேதி காலை 8.00 மணிக்கு யாசகம் எடுத்தல், காலை 12.00 மணிக்கு பல்வேறு இசை நிகழ்ச்சியுடன் சீராளதேவன் வீதியுலா காட்சியும், பகல் 2.00 மணிக்கு சீராளனை பள்ளியில் இருந்து கறி சமைக்க அழைத்து வருதலும், மாலை 4.00 மணிக்கு ஸ்ரீ அப்பர் சிவ கைலாய வாத்தியம், மங்கள வாத்தியம், செண்டை மேளம் முழங்க ஆத்திமரத்தடியில் இருந்து சிவபெருமானை அமுதருந்த அழைத்தல் நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடந்தது. நிகழ்ச்சியில் சுற்றுபகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன், சுவாமி தரிசனம் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை விழாகுழுத் தலைவர் மலரழகன் தலைமையில் உத்திராபதி, செல்வராஜ், தேவராஜ்,மோகன்,ராஜதுரை, சுந்தரலிங்கம், கண்ணன், துரையரசன் உள்ளிட்ட குழுவினர்கள் செய்திருந்தனர்.