திண்டுக்கல்அபிராமி அம்மன் கோயிலில் சித்திரை விழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஏப் 2018 10:04
திண்டுக்கல்: திண்டுக்கல்அபிராமி அம்மன், பத்மகிரீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலைச் நடந்த நிகழ்ச்சியில் எஸ்.எஸ்.எம்., குழுமத்தலைவர் சண்முகவேல் கவுண்டர், வர்த்தக சங்கத் தலைவர் குப்புசாமி, துணைத் தலைவர் ஜி.சுந்தரராஜன், தக்கார் சிவலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர். இரவில் கேடயத்தில் சுவாமி வீதி உலா வந்து அருள் பாலித்தார். 12 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகிறார். பத்தாம் நாளில் திருக்கல்யாணமும், மறுநாள் திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.