பரமக்குடி: பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகரசுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கொடிமரத்திற்கு அபிஷேகம் நடந்தது. காலை 10:15 மணிக்கு நந்தி கொடி ஏற்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு சந்திரசேகரர் பிரியாவிடையுடனும், விசாலாட்சி அம்மன் என பஞ்சமூர்த்திகள் வலம் வந்தனர். ஏப். 27ல் பகல் 12:00 மணி முதல் 1:00 மணிக்குள் திருக்கல்யாணம், மறுநாள் காலை 10:30 மணிக்கு மேல் சித்திரை தேரோட்டமும், தொடர்ந்து ஏப். 29 ல் இரவு கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும்.