பதிவு செய்த நாள்
17
மே
2018
01:05
உத்திரமேரூர்: அமாவாசை யொட்டி, அருங்குன்றம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று முன்தினம் இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. முன்னதாக காலை, 8:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகமும், அதை தொடர்ந்து, 9:00 மணிக்கு நெய்வேத்தியம் மற்றும் அலங்கார தீபாரதணை நிகழ்ச்சி நடந்தது. மாலை, 6:00 மணிக்கு பால், தயிர், நெய், குங்குமம், தேன் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இரவு, 10:00 மணிக்கு, அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். தொடர்ந்து அம்மனின் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில், அப்பகுதி சுற்று வட்டார பக்தர்கள் பங்கேற்றனர்.