உளுந்துார்பேட்டை: உளுந்தாண்டார்கோவில் மாஷபுரீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா துவங்கியது. உளுந்துார்பேட்டையிலுள்ள உளுந்தாண்டார்கோவில் லோகாம்பிகை சமேத மாஷபுரீஸ்வரர் கோவில் வைகாசி பிரம்மோற்சவ பெருவிழா துவங்கியது. அதனையொட்டி நேற்று முன்தினம் காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா துவங்கியது. நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர் தண்டபாணி, சிவாலயா குளோபல் சிபிஎஸ்சி பள்ளி தாளாளர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் பஞ்சமூர்த்திகள் மகாபிேஷகம், தீபாரதனையும், இரவு பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா நடந்தது. நேற்று முதல் வரும் 24 ம் தேதி வரை இரவு பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா நடக்கிறது. வரும் 25 ம் தேதி மாலை சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாண உற்சவமும்,
27ம் தேதி காலை 7 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தை குமரகுரு எம்.எல்.ஏ., வடம் பிடித்து இழுத்து துவக்கி வைக்கிறார். 28ம் தேதி காலை 9 மணிக்கு மேல் ஞானதீர்த்த குளக்கரையில் சுவாமி தீர்த்தவாரி நடக்கிறது. இரவு சண்டிகேஸ்வரர் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.