தேவகோட்டை:சிவகங்கை மாவட்டம்,தேவகோட்டை அருகே கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் சமேத பெரியநாயகியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.சுவாமி, அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்று, காலை 8:10 மணிக்கு திருவிழா கொடியேற்றம் நடந்தது. தமிழக அரசின் சார்பில் புதியதாக தேர் வடிவமைக்கும் பணி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தேர் பணி நிறைவடையாததால்ஜூன் 27 ந் தேதி சப்பரபவனி நடைபெறும் என தேவஸ்தான கண்காணிப்பாளர் வேலுச்சாமி தெரிவித்தார்.