பதிவு செய்த நாள்
21
ஜூன்
2018
10:06
திருப்பூர் : திருப்பூர் வட்டாரத்திலுள்ள அனைத்து சிவாலயங்களிலும், ஆனித்திருமஞ்சனம் நேற்று கோலாகலமாக நடந்தது. ஒரு ஆண்டு என்பது, தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். தேவர்களுக்கு வைகறை மார்கழி மாதமும், உச்சி காலம் சித்திரை மாதமாகவும், மாலைப்பொழுது ஆனி மாதமாகவும், இரவு பொழுது, ஆவணியாகவும், அர்த்தசாமம் புரட்டாசி மாதமாகவும் இருக்கும்.
இதில், ஆனி மற்றும் மார்கழி மாதமும் இறைவனை வணங்குவதற்கு ஏற்ற மாதங்களாக கருத்தப்படுகின்றன. உற்சவர் ஆடலரசன் நடராஜ பெருமானுக்கு, ஆண்டுக்கு ஆறு முறை அபிேஷகம் செய்யப்படுகிறது. அவ்வகையில், திருமஞ்சனம் நேற்று சிவாலயங்களில் நடந்தது. திருப்பூர், விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், அபிேஷக பிரியரான நடராஜ பெருமானுக்கு, பால், தயிர், நெய், சந்தனம், இளநீர் உட்பட 16 வகையான திரவியங்களில், மகா அபிேஷகம் நடந்தது. அதன்பின், சிறப்பு அலங்காரத்தில், நடராஜ பெருமான் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், நல்லுார் விஸ்வேஸ்வரசுவாமி கோவில், எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், சேவூர் வாலீஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், பெருமாநல்லுார் உத்தமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் ஆனித்திருமஞ்சன விழா நடந்தது.