பதிவு செய்த நாள்
23
ஜூன்
2018
12:06
ஈரோடு: சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இந்து சமய அறநிலையத் துறை சார்பில், ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், சக்கரத்தாழ்வார் ஜெயந்தி மஹா சுதர்ஸன, லட்ச ஆவர்த்தி ?ஹாமம் கடந்த, 20ல் தொடங்கியது. சக்கரத்தாழ்வரின், ஜனன, திருநட்சத்திர நாளான நேற்று, ஒரு லட்சத்து எட்டு, ஆவர்த்தி ?ஹாமம் பூர்த்தியும், பூர்ணாஹூதி, சாற்றுமுறை தீபாராதனை, கலச புறப்பாடு, பரிவார மூர்த்திகளுக்கு தீர்த்தம் பிரோஷணம் செய்யப்பட்டது.அதை தொடர்ந்து, உற்சவர் சக்கரத்தாழ்வாருக்கு, விசஷே திருமஞ்சனம், மஹா தீபாராதனை நடந்தது. ஸ்ரீரங்கம், திருச்சி, கரூர், திருப்பூர் பகுதிகளை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட பட்டாச்சாரியார்கள், வேத மந்திரங்களை படித்தனர். அதிகாலை, கோபூஜையுடன் தொடங்கி, மதியம், 2:00 மணி வரை நடந்தது. ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.