குழந்தைகளிடம் காமமும் குரோதமும் நிலைத்திருப்பதில்லை. இந்த வினாடி ஆசைப்பட்டு வாங்கிய பொருளை, அடுத்த வினாடி கீழே போட்டு விட்டுப் போய்விடும். இந்த வினாடி கோபித்துக் கொண்ட ஒருவரிடம் அடுத்த வினாடியே ஆசையோடு ஓடிப்போய் ஒட்டிக்கொள்ளும் இதனால்தான் உபநிஷத்துகளும் நம்மைக் ‘குழந்தையாக இரு’ என்று உபதேசிக்கின்றன.