பதிவு செய்த நாள்
17
ஜூலை
2018
12:07
கோவை : ஷீரடிக்கு வரும், 27ல் இயக்கப்படவுள்ள சிறப்பு ரயிலுக்கு முன்பதிவு துவங்கியுள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி., என்ற இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சார்பில், 27ல் ஷீரடிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மதுரையில் இருந்து புறப்படும் ரயில், திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை சென்ட்ரல் வழியாக ஷீரடி, பண்டரிபுரம், மந்த்ராலயம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து செல்வோர், ஈரோட்டில் இருந்து புறப்படலாம். ஏழு நாட்களுக்கான யாத்திரைக்கு நபர் ஒருவருக்கு, 6,615 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், படுக்கை வசதிக்கான டிக்கெட் கட்டணம், உணவு, தங்கும் வசதி உள்ளிட்டவை அடங்கும். விபரங்கள் மற்றும் முன்பதிவுக்கு, 90031 40655 என்ற மொபைல்போன் எண்ணிலும், www.irctctourism.com எனும் இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.