பதிவு செய்த நாள்
19
ஜூலை
2018
12:07
ஈரோடு: ஆடி மாத திருவிழாவில் தீர்த்தம், அக்னிசட்டி, அலகு குத்துதல் என, காவிரிக் கரையில் குவியும் பக்தர்களின் வசதிக்காக, காவிரிக்கரை சுத்தப்படுத்தப்படும், பணி தீவிரமாக நடக்கிறது. ஆடி மாதம் முழுவதும், அம்மன் கோவில்களில் திருவிழா களைகட்டும். முளைபாரி விடுதல், தீர்த்தம் எடுத்தல், அக்னிசட்டி, அலகு குத்துதல் என, ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீர் நிலைகளில் கூடுவது வழக்கம். ஈரோடு, கருங்கல்பாளையம் காவிரி ஆற்றின் கரை பகுதிக்கு, நாமக்கல், ஈரோடு சுற்றுவட்டார மக்கள் தீர்த்தம் எடுக்க வருவார்கள். இதையொட்டி, மாநகராட்சி சார்பில், காவிரி கரையை சுத்தப்படுத்தும் பணி, கடந்த இரண்டு நாளாக நடக்கிறது.