வேதமே மலையாக இருந்து இறைவனைத் தாங்கிய தலம் திருக்கழுக்குன்றம். இங்கு மலைமீது ஒரு கோயிலும், ஊருக்குள் ஒரு கோயிலுமாக இருகோயில்கள் உள்ளன. மலையில் சிவன் வேத கிரீஸ்வரராக வீற்றிருக்கிறார். ஊருக்குள் இருக்கும் கோயில், தாழக்கோயிலில் பக்தவத்சலேஸ்வரர் அருள்பாலிக்கிறார். அம்மன் திரிபுரசுந்தரிக்கு ஆடிப்பூரம், ஆயுதபூஜை, பங்குனிஉத்திரத்தில் மட்டும் முழுமையாக அபிஷேகம் நடக்கும். மற்றநாட்களில் பாதத்திற்கு மட்டுமே அபிஷேகம் செய்வர். இங்குள்ள சங்கு தீர்த்தத்தில் காலையில் நீராடி, மலையை வலம் வந்து வழிபட்டவர்க்கு ஆரோக்கியம் நிலைக்கும்.