காவிரிக்கரையோர மாவட்ட மக்கள் சிறப்பாக கொண்டாடும் பண்டிகை ஆடிப்பெருக்கு. ஆடி18ல் இவ்விழா நடத்தப்படும். காவிரியாற்றங்கரைக்கு. மக்கள் சித்ரான்னத்துடன் (பலவகை சாதம்)செல்வர். சுமங்கலிப்பெண்கள் மாங்கல்ய பலம் பெற வழிபடும் விதமாக காதோலை, கருகமணி போன்ற மங்கலப் பொருட்களை ஆற்றில் விட்டு வழிபடுவர். குழந்தைகள் ஆற்றுமணலில் சிறுவீடுகட்டி விளையாடுவார்கள். புதுமணத் தம்பதிகள் காவிரியில் நீராடி,பூஜை செய்வர். விவசாயத்திற்கும், குடிக்க நீரும் தரும் காவிரித்தாய்க்கு நன்றி செலுத்தும் வகையில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.