பதிவு செய்த நாள்
12
ஆக
2018
01:08
வாழப்பாடி: வாழப்பாடி அருகே, மாரியம்மன்புதூர் மக்கள், கோதுமலை உச்சியிலுள்ள கன்னிமார் கோவிலில், மழை வேண்டி, நேற்று, சிறப்பு பூஜை நடத்த முடிவு செய்திருந்தனர். அதன்படி, காலை, 7:00 மணிக்கு மேல், பூஜை பொருட்களுடன், குதிரையை அலங்கரித்து, மேள வாத்தியம் முழங்க, ஒற்றையடி பாதையில், கோவிலுக்கு சென்றனர். அங்கு, பூஜை செய்துவிட்டு, மாலை ஊருக்குள் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, மழை பெய்ததால், வேண்டுதல் நிறைவேறியதாக கருதி, மக்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.