பதிவு செய்த நாள்
12
ஆக
2018
01:08
வாலாஜாபேட்டை: வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், நேற்று தன்வந்திரி சுவாமிக்கு, அரிசி அபி?ஷகம் நடந்தது. தொடர்ந்து, பித்ரு தோஷம், அன்ன தோஷம் நீங்கி, கடன் பிரச்னை விலகி, ஆரோக்கியத்துடன் வாழ, பத்ர காளி யாகம் நடந்தது. முரளிதர சுவாமிகள் தலைமை வகித்தார். தலா, 11 கிலோ மஞ்சள், குங்குமம், நெய், சாதம், மிளகாய், 500 தேங்காய், 1,000 எலுமிச்சை, பட்டுப் புடவை ஆகியவை, யாகத்தில் சேர்க்கப்பட்டன. தொடர்ந்து, சுமங்கலி பிரார்த்தனை, கண் திருஷ்டி ?ஹாமம் நடந்தது. யாகத்தில் பங்கேற்ற ஏராளமான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.