பதிவு செய்த நாள்
13
ஆக
2018
11:08
சென்னை:தாம்பரம், கடப்பேரி, ஜி.எஸ்.டி., சாலையில் அமைந்துள்ளது, வக்ரகாளியம்மன் கோவில். இந்த கோவில், 15ம் தேதி, நாகபஞ்சமி, கருடபஞ்சமியை முன்னிட்டு, ஆடிப்பூரம் மற்றும் வளைகாப்பு விழா நடைபெற உள்ளது. அன்று மாலை, 4:30 மணிக்கு, கோவில் வளாகத்தில் உள்ள திரயம்பர கணபதிக்கு அபிஷேகம், விக்னஷே்வர பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், 6:00 மணிக்கு, தேவி கட்கமாலா சகஸ்ரநாமமும், 7:30 மணிக்கு, தேவதாபலியும் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, மங்கல ஆரத்தி, மகா தீபாராதனை, மகாபிரசாதம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை, கணேசன் குருக்கள் செய்து உள்ளார்.