பதிவு செய்த நாள்
13
ஆக
2018
10:08
விருதுநகர், சதுரகிரி மலையில் நடந்த ஆடி அமாவாசை வழிபாடு, நேற்று நிறைவடைந்தது. மதுரை மாவட்டம், சதுரகிரி மலையில், ஆக., 9 முதல் ஆடி அமாவாசை விழா துவங்கி, நான்கு நாட்களாக நடந்தது. நேற்று முன்தினம், ஆடி அமாவாசை வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நெரிசலை தவிர்க்க, அமாவாசை முடிந்த பின், நேற்றும் ஏராளமான பக்தர்கள் மலைக்கு சென்றனர். அவர்களுக்காக, அமாவாசையன்று, மகாலிங்கம் சுவாமிக்கு செய்யப்பட்ட அலங்காரம், கலைக்கப்படாமல் வைக்கப்பட்டிருந்தது. நேற்று சுவாமிக்கு, மூன்று கால பூஜைகளுடன் வழிபாடு நடந்தது. மாலையில் நடந்த சாயரட்சை வழிபாட்டிற்கு பின், சுவாமிக்கு அலங்காரம் கலைக்கப்பட்டு, நிறைவு பூஜைகள் நடந்தன. அமாவாசை வழிபாடு முடிந்தாலும், மலைப் பாதை இன்றும், நாளையும் திறக்கப்பட்டிருக்கும். நாளை காலை, 11:00 மணி வரை, பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். பின், மலைப் பாதை மூடப்படும்.