பதிவு செய்த நாள்
26
ஆக
2018
08:08
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கும்பாபிேஷக திருப்பணிகள் தீவிரமாக நடக்கிறது. விருத்தாசலத்தில் 1,500 ஆண்டுகள் பழமையான விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கடந்த 2002ம் ஆண்டு, ஏப்ரல் 29ம் தேதி கும்பாபிேஷகம் செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு கும்பாபிேஷகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதற்காக, கடந்த மாதம் 5ம் தேதி சிறப்பு வேள்வி பூஜைகளுடன் பாலாலயம் செய்து, திருப்பணிகள் துவங்கின. அதன்படி, அரசு நிதியின் கீழ் 11 பணிகளை மேற்கொள்ள கடந்த மாதம், 20ம் தேதி, டெண்டர் விடப்பட்டன. அதற்குரிய அங்கீகாரம் பெற இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் பங்களிப்புடன் ஐந்து கோபுரங்களையும் புதுப்பிக்க, பக்தர்களிடம் நிதி கோரப்பட்டது. அதில், ஆழத்து விநாயகர் சன்னதிக்கு கலைச்செல்வன் எம்.எல்.ஏ., கிழக்கு கோபுரம் ஜெயின் ஜூவல்லரி அகர்சந்த், தெற்கு கோபுரம் தொழிலதிபர் கோவை வசந்தகுமார் ஆகியோர் சீரமைப்பு பணி மேற்கொள்கின்றனர். இதற்காக, கோபுரங்களுக்கு சாரம் அமைத்து, பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.