கும்பகோணம் சாரங்க பாணி கோயில், குழந்தைப்பேறு அருளும் திருத்தலமாகத் திகழ்கிறது. இங்கு கருவறையில் ஆதிசேஷன்மீது பள்ளிகொண்டுள்ள குழந்தை உருவ கிருஷ்ண விக்ரகம் ஒன்றுள்ளது. குழந்தை வரம் வேண்டுவோர், அந்த விக்ரகத்தை மடியில் வைத்து மாலவனிடம் மனமுருக வேண்டிக்கொண்டால், விரைவில் மகப்பேறு கிட்டுகிறதாம்.