போடி: புரட்டாசி திருவோணத்தை முன்னிட்டு போடி சீனிவாசப்பெருமாள் கோயிலில் சுவாமி ஸ்ரீதேவி, பூதேவிக்கு நவகலசம், 200 கிலோ பஞ்சாமிர்த அபிஷேகம், சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது.
சீனிவாசப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு பூஜைகள், அலங்காரத்தை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.