பதிவு செய்த நாள்
17
அக்
2018
11:10
திருவல்லிக்கேணி: திருவெற்றீஸ்வரர் கோவில் குளத்தில், தேங்கி உள்ள கழிவுநீரை அப்புறப் படுத்த, அறநிலையத்துறை அதிகாரிகள், நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, பக்தர்களிடை யே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.திருவல்லிக்கேணியில் உள்ள திருவெற்றீஸ் வரர் கோவில் குளத்தில், கழிவுநீர் குட்டை போல் தேங்கி உள்ளது.இக்கோவில் குளத்திற்கு, சுற்று வட்டார பகுதி களிலிருந்து, மழைநீர் செல்வதற்காக அமைக்கப் பட்ட வடிகாலில், கழிவு நீர் இணைப்பை, சிலர் சட்டவிரோதமாக கொடுத்துள்ளனர்.
இதனால், கோவில் குளத்தில், தற்போது கழிவுநீர் தேக்கமடைந்துள்ளது. அவற்றை அப்புறப் படுத்தவும், குளத்திற்கு கழிவுநீர் வருவதை தடுக்கவும், நடவடிக்கை எடுக்க, பக்தர்கள் அறநிலைத் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பக்தர்கள், தங்கள் மொபைல் போன் மூலமாக, வீடியோ பதிவு செய்து, அவற்றை சமூக வளைதளங்க ளில் பதிவிட்டனர்.இதை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குளங்களுக்கு கழிவுநீர் வரும் பாதையை அடைத்தனர். ஆனால், குளத்தில் தேங்கி உள்ள கழிவுநீரை, இதுவரை அகற்றுவதற் கான நடவடிக்கை எடுக்காதது, பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சம்பந்தப் பட்ட அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.