மதுரை: ஷீரடி சாய்பாபா மகாசமாதி நுாற்றாண்டையொட்டி, மதுரை, ஆண்டாள்புரம், சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள அகமது மாவட்டம் ஷீரடியில் சாய்பாபா, 1918ல் மகாசமாதியடைந்தார். விழாவை முன்னிட்டு, பாபாவுக்கு, நுாற்றாண்டு சிறப்பு அபிஷேகம், ஹாரத்தி நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பாபா பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.