பதிவு செய்த நாள்
14
நவ
2018
12:11
* துளிகள்:
* காஞ்சிபுரம் குமரகோட்டம் கோவிலில், மதியம், 1:30 மணிக்கு மகா அபிஷேகம் துவங்கி, மாலை, 3:00 மணிக்கு நிறைவு பெற்றது.
* திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், பகல், 12:10 மணிக்கு, சுவாமி, சரவண பொய்கை திருக்குளத்தில் தீர்த்தவாரி ஆடினார்.
* பக்தர்கள் பால்காவடி, புஷ்ப காவடிகள் எடுத்தனர். துலாபாரத்தில், எடைக்கு எடை நேர்த்தி கடனும் செலுத்தினர். மாலை, 6:30 மணிக்கு, கந்தபெருமான், வெள்ளி குதிரை
வாகனத்தில் எழுந்தருளி, போருக்கு புறப்பட்டார்.
* சூரபத்மனை, நெம்மேலி செல்லும் சாலை வரை விரட்டிச்சென்று, சக்தி வேலால் வதம் செய்தார்.
* வல்லக்கோட்டை முருகன் கோவிலில், பல முகங்களுடன் வலம் வந்து போரிட்ட சூரனின் தலையை, முருகப்பெருமான் கொய்தார்.
* இன்று 14ல், முருகப்பெருமான் - தெய்வாணை திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது. செங்கல்பட்டில் சூரசம்ஹாரம் விழா
* கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரியில், சுப்ரமணியர் கோவிலில், சூரசம்ஹாரம் விழா, நேற்று 13ல், நடைபெற்றது.கூடுவாஞ்சேரி மாமர சுயம்பு சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இங்கு, வளாகத்தில், வள்ளி தெய்வாணை சமேத சுப்ரமணிய, சன்னதி உள்ளது. இந்த கோவிலில், கந்தசஷ்டி விழா, கடந்த 8 ம் தேதி, துவங்கி,13ம் தேதி, சஷ்டி விழா நடைபெற்றது. நேற்று 13ல் காலை 5:00 மணிக்கு, விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், வள்ளி, தெய்வாணை சமேத முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.
அதன்பின், இரவு 7:00 மணிக்கு, சூரசம்ஹாரம் நடைபெற்று. அதன், சுப்ரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருனார். விழா ஏற்பாடுகளை, அறங்காவலர் சீனுவாசன், தலைமை அர்ச்சகர் முத்துகுமார் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். இதேபோன்று, செங்கல்பட்டு கைலாசநாதர் கோவிலிலும்,செம்மலை வேல்முருன் கோவிலிலும் நடைபெற்றது. செங்கல் பட்டு சக்தி விநாயகர் கோவிலில், கல்யாண சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்,
சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.