பதிவு செய்த நாள்
17
நவ
2018
11:11
பாலக்காடு: கல்பாத்தியில் பிரசித்தி பெற்ற தேர்த்திருவிழா ரத சங்கமம் நேற்று (நவம்., 16ல்), பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடந்தது.
கேரளா, பாலக்காடு கல்பாத்தியில் பிரசித்தி பெற்ற விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோயில் தேர்த்திருவிழா 14ல் துவங்கியது. முதல் நாள் விழாவில், விசாலாட்சி சமேத விஸ்வநாதர், சுப்பிரமணியர், விநாயகர் சுவாமிகள், அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் நான்கு வீதிகளிலும் பவனி வந்தனர்.
நேற்று (நவம்., 16ல்) காலை பழைய கல்பாத்தி லட்சுமி நாராயண பெருமாள் கோயிலிலும் சாத்தப்புரம் பிரசன்ன கணபதி கோயிலிலும் ரத உற்ஸவம் நடந்தது.
நேற்று (நவம்., 16ல்) இரவு, லட்சுமி நாராயண பெருமாள் தேர், சாத்தப்புரம் பிரசன்ன கணபதி கோயில் தேர், விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோயில் தேர்கள், தேர்மூட்டியில் சங்கமித்தன.
வண்ண விளக்கொளியில் ஜொலித்த தேர்களின் சங்கமம், அங்கு திரண்டிருந்த பல்லாயிரக் கணக்கான பக்தர்களை, பரவசப்படுத்தியது. தொடர்ந்து உற்ஸவமூர்த்திகளுக்கும் உபதேவதைகளுக்கும் நடந்த சிறப்பு பூஜைகளுடன், திருத்தேர் உற்ஸவம் நிறைவடைந்தது.