பதிவு செய்த நாள்
17
நவ
2018
12:11
சபரிமலை: நேற்று (நவம்., 16ல்) மாலை சபரிமலை நடைதிறந்த போது மழை கொட்டி தீர்த்தது. காலையில் பெய்ய தொடங்கிய மழை, இரவிலும் நீடித்தது. மழையில் நனைந்தபடி பக்தர்கள் 18ம் படியேறினர். சன்னிதானத்தில் தங்க கூடாது என்று கட்டுப்பாடு விதித்திருந்தாலும், கிடைத்த இடங்களில் பக்தர்கள் தங்கினர்.
சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள்: அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக, இன்று (நவம்., 17ல்) முதல், அரசு போக்கு வரத்துக் கழகங்கள் சார்பில், சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இன்று (நவம்., 17ல்), கார்த்திகை மாதம் பிறந்துள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை போடும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித் துள்ளது. இந்நிலையில், அரசு விரைவு, மதுரை, கோவை போக்குவரத்துக் கழகங்கள், சிறப்பு பஸ்களை இயக்குகின்றன.தற்போது, பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பஸ்களை அதிகப்படுத்த முன்வந்துள்ளன. குழுவாக செல்வோர், போக்குவரத்துக்கழக கிளை மேலாளர்களை அணுகலாம். முன்பதிவுக்கு, http://www.tnstc.in/ என்ற இணைய தளத்தை பயன்படுத்தலாம்.