பதிவு செய்த நாள்
19
நவ
2018
12:11
திருவண்ணாமலை: தீப திருவிழாவையொட்டி, நேற்று ஐந்தாம் நாள் விழா கோலாகலமாக நடந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவின், ஐந்தாம் நாளான, நேற்று காலை, 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபி?ஷகம் மற்றும் பூஜை நடந்தது. காலை, 10:00 மணிக்கு, வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர், ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் சுவாமி வீதி உலா நடந்தது. இரவு, 10:00 மணிக்கு நடந்த பஞ்சமூர்த்திகள் வீதி உலாவில், வெள்ளி சின்ன ரிஷப வாகனத்தில் விநாயகர், வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர், வெள்ளி பெரிய ரிஷப வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், வெள்ளி சின்ன ரிஷப வாகனத்தில் பராசக்தி அம்மன், வெள்ளி ரிஷபத்தில் சண்டிகேஸ்வரர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதை, ஏராளமான பக்தர்கள் கண்டு, சுவாமியை வழிபட்டனர்.