சரநாராயண பெருமாள் கோவிலில் ஆஞ்சநேயர் சுவாமிக்கு லட்சார்ச்சனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20நவ 2018 11:11
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஆஞ்சநேயர் சுவாமிக்கு நேற்று முன்தினம் லட்சார்ச்சனை நடந்தது.கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமையையொட்டி நேற்று முன்தினம், ஆஞ்சநேயர் சுவாமிக்கு லட்சார்ச்சனை நடந்தது. அதனையொட்டி, காலை 8:00 மணிக்கு ஆஞ்ச நேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.இரவு 8:00 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.