பதிவு செய்த நாள்
05
டிச
2018
12:12
தர்மபுரி: பிரதோஷத்தை முன்னிட்டு, தர்மபுரி மாவட்ட சிவன் கோவில்களில், நேற்று சிறப்பு பூஜை மற்றும் அபி ?ஷகம் நடந்தது. தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, தர்மபுரி நெசவாளர் காலனி மகாலிங்கேஸ்வரர் கோவில் பிரகாரத்தில் உள்ள நந்திக்கு மாலை, 4:30 மணிக்கு பால், பன்னீர், தேன், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபி?ஷகம் நடந்தது. பின்னர், அலங்கார பூஜை நடந்தது. 6:00 மணிக்கு மேல், மூலவர் மகாலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபி ?ஷகம் நடந்தது. திரளான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில், கடைவீதி மருதவானேஸ்வரர் கோவில், மொடக்கேரி ஆதிசக்தி சிவன் கோவில் உட்பட, மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில், தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை, அபி ?ஷகம் நடந்தது.