பதிவு செய்த நாள்
06
டிச
2018
12:12
திருச்சி: திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி, ஜெம்புகேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மாம்பாலச்சாலை காவிரியாற்றில் இருந்து யானையின் மீது புனித நீர் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
பஞ்சபூத தலங்களில் நீர்த்தலமாக விளங்கும், திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலை புதுப்பித்து, திருப்பணிகள் செய்யப்பட்டது. திருப்பணிகள் நிறைவடைந்துள்ளதால், டிசம்பர், 9 மற்றும் 12ம் தேதிகளில், 2 கட்டமாக கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. டிசம்பர் 9ம் தேதி காலை 8:15 மணிக்குள், பரிவார தெய்வங்களுக்கும், விமானங்களுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. இரண்டாம் கட்டமாக, டிசம்பர், 12ம் தேதி, 7 மணிக்கு மேல், ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி சுவாமிகளுக்கும், கோபுரங்களுக்கும் கும்பாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக, மாம்பாலச்சாலை காவிரியாற்றில் இருந்து யானையின் மீது புனித நீர் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.