வடமதுரையில் நாளை (டிசம்., 18ல்) சொர்க்க வாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2018 04:12
வடமதுரை : வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் நாளை (டிச.18) அதிகாலை 5.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. முன்னதாக 4:00 மணிக்கு திருமஞ்சனம், உஷகால பூஜை, ஆழ்வார் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கின்றன. காலை 7:00 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி தேர் ரத வீதிகள் வழியே நகர்வலம் நடக்கிறது.எரியோடு வரதராஜப் பெருமாள் கோயிலிலும் நாளை அதிகாலை 4:30 மணிக்கு அலங்காரம், திருமஞ்சனம் நடக்கிறது. 5:45 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நடக்கிறது.
பூத்தாம்பட்டி மண்டபம்புதூர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோயிலில் நாளை (டிச.18) அதிகாலை 5:30 மணிக்கு திறக்கப்படுகிறது. காலை 6:00 - மதியம் 12:00 மணி வரை பக்தி இன்னிசையும், தொடர்ந்து மதியம் 1:45 மணி வரை ஆன்மிக சொற்பொழிவும் நடக்கிறது. மதியம் 2:00 மணிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெற உள்ளது.