பதிவு செய்த நாள்
18
டிச
2018
01:12
கொடுமுடி: சேஷாத்ரி சுவாமிகள் ஆராதனை விழா, வரும், 25 முதல், தொடங்க உள்ளது. கொடுமுடி வட்டாரம், ஊஞ்சலூரில் சேஷாத்ரி சுவாமிகள் சன்னதியில் ஆண்டுதோறும் டிசம்பரில் ஆராதனை விழா, வெகு விமர்சையாக நடக்கும். அதையொட்டி, 90வது ஆண்டு ஆராதனை விழா வரும், 25 செவ்வாய்கிழமை தொடங்கி, 30ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை வரை நடக்கிறது. நாள்தோறும் காலை, 5:00 மணிக்கு, வேத பாராயணம், லட்சார்ச்சனை, நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்படும். முக்கிய நிகழ்வான ஆராதனை விழா, வரும், 30, காலை 10:00 மணிக்கும், அதைதொடர்ந்து, மதியம், 3:00 மணிக்கு, பக்தர்களுக்கு, சுவாமிகளின் மங்களாட்சதை நிகழ்ச்சியும் நடக்கிறது. வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் தங்குவதற்கு ஏதுவாக, இடம் மற்றும் உணவு ஏற்பாடு வசதி செய்யப்பட்டு வருகிறது.