அந்தணர்களுக்கு பசு தானம் செய்வதால் கொடிய பாவம் கூட நீங்கும். ஆனால், பசுவை தானமாகப் பெறுபவர் அதனைப் பாதுகாப்பாரா என்று உறுதிப்படுத்த வேண்டும். சியவன மகரிஷி ஸ்லோகம் ஒன்றில், எங்கு பசுக்கள் பயமின்றி துன்பம் இல்லாமல் நிம்மதியாக மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறதோ அங்கு பாவம் எல்லாம் நீங்கி ஒளி பெற்றுத் திகழும்என சொல்லியுள்ளார். அந்த உயர்ந்த நிலையை உலகம் அடைய கிருஷ்ணர் அருள் புரியட்டும் என காஞ்சிப்பெரியவர் கூறியுள்ளார்.