பதிவு செய்த நாள்
23
ஜன
2019
10:01
வெள்ளவேடு : திருமழிசை ஜெகநாத பெருமாள் கோவிலில், நேற்று, தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
வெள்ளவேடு அடுத்த, திருமழிசையில், ஜெகந்நாத பெருமாள் மற்றும் ஆழ்வார் கோவிலில், தையில் மகதிரு அவதார மஹோற்சவம், 14ம் தேதி துவங்கியது.தினமும், காலை, மாலை இரு வேளையிலும், வாகனங்களில் பெருமாள் மற்றும் திருமழிசை ஆழ்வார் புறப்பாடு நடைபெறுகிறது.நேற்று முன்தினம், காலை, 8:00 மணி அளவில், தங்க தோளுக்கினியான் நாச்சியார் திருக்கோலத்தில் ஏழூர் புறப்பாடும், மதியம், எண்ணெய் காப்பு திருமஞ்சனம், இரவு, தங்க தோளுக்கினியானில் வீதி வலம் வருதல் நடைபெற்றது.நேற்று காலை, பெரிய திருத்தேர் புறப்பாடு துவங்கியது. ஏராளமான பக்தர்கள், கோவிந்தா... ஜெகநாத பெருமாளே... என்று கோஷமிட்டபடி, தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். நான்கு வீதிகளில் வலம் வந்த தேர் நிலைக்கு வந்த பின், வரிசையில் நின்று பெருமாளை வழிபட்டனர்.இன்று, காலை, 8:00 மணிக்கு, சாற்றுமுறை உற்சவம் மூலவர் திருமஞ்சனம், தங்க பல்லக்கில் திருமழிசை ஆழ்வார் அவதார மண்டபத்திற்கு எழுந்தருளல் நடைபெறுகிறது.