பதிவு செய்த நாள்
15
பிப்
2019
11:02
திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழா ஜன.31ல் துவங்கி நடந்து வருகிறது. விழாவின் 15ம் நாளான நேற்று அம்மன் திருமஞ்சன பாலாபிஷேகம் முடிந்து கரகத்துடன் எழுந்தருளினார்.
மெயின்ரோடு கீழரதவீதி வழியாக தெற்கு தெருவில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார். நைவேத்தியம் பெற்று, அலங்கார மின்னொளி ரதத்தில் மேற்குரதவீதி, கலைகோட்டு விநாயகர் கோயில் தெரு, பென்ஷனர் ொதரு, கோபாலசமுத்திரம் தெரு மற்றும் கிழக்கு, தெற்குரத வீதிகள் வழியாக சந்நிதானம் அடைந்தார். இந்நிகழ்ச்சியில் ஏ.ஆர்.டைரி புட் உரிமையாளர் ராஜசேகரன், நாட்ராயன் போர்வெல் நாட்ராயன், ஹேப்பி சிட்டி புரமோட்டர்ஸ் தலைவர் ஏ.ஆர்.கோபி, ஹிந்துஸ்தான் ஸ்டீல்ஸ் நடராஜன், ரியல் பழமுதிர்சோலை உரிமையாளர் கோபிகிருஷ்ணன், எஸ்.கே.இன்ஜினியர்ஸ் செந்தில்குமார், வேல்முருகன் ஏஜென்சீஸ் ராமமூர்த்தி, இன்சூரன்ஸ் ஆலோசகர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.