பதிவு செய்த நாள்
18
பிப்
2019
12:02
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், 14 கி.மீ., கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணா முலையம்மனை வழிபடுகின்றனர்.
இதன்படி, மாசி மாத பவுர்ணமியான இன்று (பிப்., 18ல்) நள்ளிரவு, 12:50 முதல், நாளை (பிப்., 19ல்) இரவு, 10:05 மணி வரை பவுர்ணமி திதி உள்ளதால், பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.