நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசி மாத மயானகொள்ளை திருவிழாவை முன்னிட்டு, 7ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.
கடந்த 3 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 4ம் தேதி இரவு பூவினால் கப்பறை, இருளன் கப்பறை நடந்து சுவாமி வீதி உலா நடந்தது. 5ம் தேதி மாலை 6:00 மணிக்கு குறத்தி வேடம் கட்டி குறி சொல்லுதல், வள்ளாலகண்டன் கோட்டை கட்டும் ஐதீகம், சுவாமி வீதி உலா நடந்தது. கடந்த 6ம் தேதி புதன்கிழமை மதியம் 3:00 மணிக்கு மயான கொள்ளை திருவிழாவும், தேரில் அம்மன் வீதி உலா நடந்தது. நேற்று முன்தினம் 7 ம் தேதி காலை அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நடந்து, மாலை 5:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்து அம்மன் வீதி உலா நடந்தது. இரவு 8:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழா ஏற்பாடுகளை பருவதராஜ குலத்தினர் செய்திருந்தனர்.