மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் தெப்பல் உற்சவ திருவிழா நடந்தது. கடந்த 12ம் தேதி பங்குனி உத்திர பெரு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 20ம் தேதி காலை 5:45 மணிக்கு தேர் திருவிழா நடந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு 1:00 மணிக்கு மயிலம் மலையடிவாரத்திலுள்ள அக்னி குளத்தில் தெப்பலில் வள்ளி, தெய்வானை சமேதராக சுப்பரமணியர் சுவாமி மூன்று முறை வலம் வந்தார். பின்னர் சுவாமிக்கு மகா தீபாராதனை, வழிபாடு நடந்தது. விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.