பதிவு செய்த நாள்
18
ஏப்
2019
04:04
சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவம், நாளை 19ல், கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், ஆண்டு தோறும் சித்திரை மாதம், 10 நாள் பிரம்மோற்சவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவம், நாளை ஏப்., 19ல் காலை, 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 21ம் தேதி, கருட சேவை நடக்கிறது. 23ம் தேதி, நாச்சியார் கோலத்தில், பல்லக்கு சேவை நடக்கிறது.
விழாவின் முக்கிய நாளான, 25ம் தேதி, தேர் திருவிழா நடக்கிறது. அன்று காலை, 7:30 மணிக்கு, தேர் வடம் பிடிக்கப்படுகிறது. 26ம் தேதி, வெண்ணெய் தாழி கண்ணன் கோலத்தில், பல்லக்கு சேவை நடக்கிறது.27ம் தேதி தீர்த்தவாரி உற்சவமும், அன்று இரவு, 7:30 மணிக்கு கண்ணாடி பல்லக்கு சேவையும் நடக்கிறது. 28ம் தேதி கொடி இறக்கத்துடன் விழா பூர்த்தியாகிறது. 29ம் தேதி முதல் மே., 8ம் தேதி வரை, விடையாற்றி உற்சவம் நடக்கிறது.