பதிவு செய்த நாள்
18
ஏப்
2019
04:04
மடிப்பாக்கம்: மடிப்பாக்கம், சீதளாதேவி அம்மன் கோவிலில், சித்ரா பவுர்ணமி விழா, நாளை (ஏப்., 19ல்) விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
மடிப்பாக்கம், குபேரன் நகர் விரிவு பகுதியில், மஹா சக்தி சீதளாதேவி அம்மன் கோவில் அமைந்துள்ளது.பார்வதி தேவியின் அவதாரமான, சீதளாதேவிக்கான கோவில், 2002ல், குருஜி ராகவனால் நிர்மாணிக்கப்பட்டது. அவரே, அக்கோவில் தலைமை அர்ச்சகராகவும் உள்ளார். இக்கோவிலின் வடக்கு திசை நோக்கி, சீதளாதேவி அம்மன் அருள் பாலிக்கிறார். மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், சித்ரா பவுர்ணமி விழா, வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
17வது ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா, நாளை (ஏப்., 19ல்) கொண்டாடப்படுகிறது.இதை முன்னிட்டு, மாலை, 5:00 மணிக்கு கலச பூஜை, சீதளாதேவி மூல மந்திர ஜெப ஹோமம்
நடக்கிறது.அதைத் தொடர்ந்து, அனைத்து மூர்த்தங்களுக்கும், சீதளாதேவிக்கும், விசேஷ அபிஷேக ஆராதனை நடக்கிறது.
மாலை, 6:30 மணிக்கு கலசாபிஷேகம் நடக்கிறது.சீதளாதேவி புஷ்ப அலங்காரத்தில் திருக்காட்சியும், மகா தீபாராதனையும் தொடர்ந்து நடக்கிறது. இரவு, 7:15 மணிக்கு, உற்சவ மூர்த்திக்கு தீபாராதனை, சீதளா சித்தர் அருளாசி வழங்கப்படுகிறது.அதைத் தொடர்ந்து, ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.