சித்ரா பவுர்ணமி: கண்ணகி கோயிலுக்கு பக்தர்கள் பயணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஏப் 2019 10:04
தேனி : தமிழக கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலுக்கு சித்ரா பவுர்ணமியை ஒட்டி பக்தர்கள் பயணம் செய்கின்றனர். தமிழக கேரள எல்லைப்பகதியான கூடலூரில் மங்கலதேவியான கண்ணகிக்கு கோயில் உள்ளது. குமுளியிலிருந்து 14 கி.மீ தொலைவில் உள்ள இந்த கோயிலில் சித்ரா பவுர்ணமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சித்திரை நிலவுநாள் அன்று இரு மாநில பக்தர்களும் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இதற்காக தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் கேரளாவின் இடுக்கி மாவட்ட அதிகாரிகளும் மக்களுக்கு அனுமதி வழங்கி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்கின்றனர். சித்ரா பவுர்ணமி தவிர மற்ற நாட்களில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. இந்நிலையில் இன்று (ஏப்.19) சித்ரா பவுர்ணமி கொண்டாடப்படுவதையொட்டி பக்தர்கள் கண்ணகி கோயிலுக்கு பயணம் செய்ய துவங்கியுள்ளனர்.