பதிவு செய்த நாள்
25
ஏப்
2019
01:04
பொள்ளாச்சி : பொள்ளாச்சி, போடிபாளையம் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா கடந்த, 8ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது.
ஆனைமலை திரவுபதியம்மன் தர்மராஜா கோவில் தீர்த்தம் கொண்டு வருதல், கொலு வைத்தல், கொடி மரம் கட்டுதல் நடந்தது. சக்தி கும்பம் முத்தரித்தல், ஆஞ்சநேயர், ஐவர் மலை, வெள்ளியங்கிரி மலை, தெய்வகுளம் காளியம்மன், பழநி, திருமூர்த்தி மலை, மீன்குளத்தி அம்மன், கோடந்துார் மாரியம்மன், திருநள்ளாறு, உள்ளிட்ட பல்வேறு புனித தலங்களில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு பூஜை செய்யப்பட்டது. கடந்த, 23ம் தேதி காலையில் அம்மன் சப்பர ஊர்வலம், மாலையில் பச்சை போடுதல், பூ குண்டம் திறப்பு, குண்டம் வளர்த்தல் நடந்தது.நேற்று காலை, அக்னி கும்பம் முத்தரித்து, பக்தர்கள் குண்டம் இறங்கி பூ மிதித்து, அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். மாலையில் மாவிளக்கு வழிபாடு நடந்தது. இன்று, இரட்டைக்கிடா வெட்டி சக்தி கும்பம் கங்கையில் விடுதலும், நாளை, மகா அபிேஷகம், மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.