சிபியில், 1798ம் ஆண்டு வாக்கில், மைசூர் சுல்தான் திப்புவிடம் திவானாகப் பணிபுரிந்து வந்த லட்சுமி நரசிம்ஹய்யா... தன்னுடைய சகோதரர் புட்டனய்யா என்பவருடன் இணைந்து நரசிம்ஹஸ்வாமி கோயிலைக் கட்டியுள்ளார். இந்த கோயிலினுள் சுவர்களில், அழகான ஓவியங்களை தரிசிக்கலாம். இவை செடி கொடிகளின் சாறுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட வண்ணங்களிலிருந்து வரையப்பட்டவை. இந்துமத பாரம்பரிய தெய்வங்கள்... தேவியர் என அனைத்தையும் அழகு ஓவியங்களாக இங்கு காணலாம். அத்துடன் டெர்ரகோட்டா மற்றும் சுண்ணாம்பால் ஆன 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலைகளையும் காணலாம். கர்நாடகத்தில் உக்கிர நரசிம்ஹர் பிரபலம். அதே போல் சிபியிலும் உக்கிர நரசிம்ஹரை தரிசிக்கலாம். ஸ்தலவிருட்சமாக பவழ மல்லி மரம் உள்ளது. அதிலிருந்து பூக்கள், பூமெத்தை விரவியது போல் விழுந்துள்ளன. இருந்தாலும் இந்தக் கோயிலுக்கு வந்து செல்வோர் மிகவும் குறைவே.