திருக்கோவிலூர் அந்திலி லட்சுமி நரசிம்மர் ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மே 2019 03:05
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், அந்திலி, லட்சுமி நரசிம்மர் கோவிலில் நரசிம்ம ஜெயந்தி விழா நேற்று (மே., 17ல்)நடந்தது.அதனையொட்டி காலை 9:00 மணிக்கு, லட்சுமி நரசிம்மருக்கு, சுதர்சன ஹோமம், மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.மாலை 6:00 மணிக்கு வேத பாராயணம் மற்றும் பக்தர்களின் பஜனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.