காரைக்குடி : காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோயிலில் செவ்வாய் திருவிழாவை முன்னிட்டு தெப்ப உற்ஸவம் நடைபெற்றது. மே 14 ம் தேதி காப்பு கட்டுடன் விழா துவங்கியது. தினமும் காலை 8:30 மணி, இரவு 9:00 மணிக்கு பல்வேறு வாகனங்களில் அம்பாள் வீதி உலா வந்தார். முக்கிய நிகழ்வாக மே 21 ல் தேரோட்டம் நடந்தது. விழாவை முன்னிட்டு அம்பாள் யானை வாகனத்தில் வீதி உலா வந்தார். அம்பாளுக்கு மஞ்சள் நீராட்டும் நடந்தது. தெப்ப உற்சவ விழாவை முன்னிட்டு அம்பாள் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு எழுந்தருளினார். அன்று மாலை 6:00 மணிக்கு நாதஸ்வர கச்சேரியும், இரவு 11:00 மணிக்கு தெப்ப உற்ஸவமும் நடந்தது. நேற்று காலை புஷ்ப பல்லக்கில் வீதி உலா வந்தார். கோயில் இணை கமிஷனர் ஜெகநாதன், உதவி கமிஷனர் ராமசாமி, செயல் அலுவலர் பிரதீபா ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.