பதிவு செய்த நாள்
25
மே
2019
12:05
கமுதி : கமுதி அருகே வலையபூக்குளம் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீபெரியமுத்தம்மன், ஸ்ரீசந்தனமாரியம்மன், ஸ்ரீபத்திரகாளியம்மன், ஸ்ரீபெரியாண்டவர் திருக்கோயில் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, வைகாசி பொங்கல் விழா மே 10 ல் துவங்கியது. தினமும் யாகசாலை வழிபாடு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மே 20 ல், ஆற்றில் இருந்து கரகம் எடுத்து வந்து பொங்கல் விழா நடந்தது. பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து, பூக்குழி இறங்கி, பெரியமுத்தம்மன், சந்தனமாரியம்மன், பத்திரகாளியம்மன் கோயில்களில் நேர்த்தி கடன் செலுத்தினர். நேற்று காலை கோயிலில் பெண்கள் 1008 திருவிளக்கு பூஜை செய்து மழைவேண்டி சிறப்பு பூஜைகள் செய்தனர்.
நிகழ்ச்சியில் வலையபூக்குளம் சத்ரிய நாடார் உறவின் முறை தலைவர் கோபால், சத்ரிய நாடார் உறவின்முறை காரியக்காரர் நாகராஜ், முறைகாரர்கள் சித்திரவேல், வசந்தன், முனியசாமி, சந்தனம், சென்னை வாழ் சத்திரிய இந்து நாடார் உறவின் முறை தலைவர் குணசேகரன், செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் ராஜேந்திரன், கவுரவ ஆலோசகர்கள் காசிராஜன், பூமிநாதன், தமிழழகன், துணை தலைவர்கள் ஆறுமுகம், அன்பழகன், பால்பாண்டியன், துணை செயலாளர்கள் குழந்தைவேல், சுப்பிரமணி, தனசேகர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் உட்பட பக்தர்கள் பங்கேற்றனர்.