சபரிமலை நடை திறப்பு: 20ம் தேதி வரை பூஜைகள் நடக்கும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூன் 2019 11:06
சபரிமலை:ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று முதல் நெய்யபிஷேகம் நடைபெறும். மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். வேறு விசேஷ பூஜைகள் எதுவும் இல்லை.
இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின் நிர்மால்ய தரிசனம், அபிஷேகத்துக்கு பின்னர் நெய்யபிஷேகத்தை தந்திரி கண்டரரு ராஜீவரரு தொடங்கி வைக்கிறார். 20-ம் தேதி வரை எல்லா நாட்களில் பகல் 12:00 மணி வரை நெய்யபிஷேகம் உண்டு. மற்றும் காலையில் உஷபூஜை, அஷ்டாபிஷேகம், மதியம் களபாபிஷேகம், உச்சபூஜை, மாலையில் தீபாராதனை, புஷ்பாபிஷேகம், இரவு 7:00 மணிக்கு படிபூஜை, இரவு 9:00 மணிக்கு அத்தாழபூஜை நடைபெறும்.இவற்றுடன் சில நாட்களில் சகஸ்ரகலச பூஜையும் நடைபெறும். 20-ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியால் ஆளும் கம்யூனிஸ்ட் அரசு சபரிமலையில் போலீசின் கெடுபிடியை குறைத்துள்ளது. போலீசாரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் நிலக்கல்லில் இருந்து வயது பெண்களை பம்பை செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.