பதிவு செய்த நாள்
24
ஜூன்
2019
12:06
ஈரோடு: மழை வேண்டி, தமிழகம் முழுவதும் கோவில்களில், வருண ஜபம், யாகம் நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டது.
இதன்படி, ஈரோடு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், ஈரோடு, கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், யாகம் மற்றும் பூஜை, நேற்று காலை, 6:00 மணிக்கு தொடங்கி, 9:00 மணி வரை நடந்தது. எம்.எல்,ஏ.,க்கள் ராமலிங்கம், தென்னரசு, சிவசுப்ரமணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில், ஈரோட்டில், நேற்று காலையில், மேகமூட்டத்துடன் வானம் காணப்பட்டது. காலை, 7:30 மணிக்கு, பிரப்ரோடு, எஸ்.கே.சி., தில்லைநகர், வாசுகி வீதி, வள்ளுவர் வீதி பகுதிகளில், லேசான தூறலும் விழுந்தது. பலத்த மழையை எதிர்பார்த்த நிலையில், மேக கூட்டங்கள், சிறிது நேரத்தில் ஓடிப்போனதால், மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.