பதிவு செய்த நாள்
27
ஜூன்
2019
11:06
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட மோச்சேரியில், மோசூரம்மன் கோவிலில், ஆனி தேரோட்டம், நாளை, மதியம், 2:00 மணிக்கு நடைபெறுகிறது. இத்திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை, காலை, 10:00 மணிக்கு, பால்குட ஊர்வலமும், அன்று மாலை ஊரணிப் பொங்கலும் வைக்கப்பட்டது.இன்று, காலை, 9:00 மணிக்கு, மோசூரம்மன் வீதியுலா நடைபெறுகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நாளை, மதியம், 2:00 மணிக்கு அம்மன் தேரில் எழுந்தருள்வார். அப்பகுதியில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.இதை தொடர்ந்து, மாலை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.