காரைக்கால் மாங்கனி திருவிழா: பிக்ஷாடன மூர்த்தி வெள்ளை சாத்தி புறப்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூலை 2019 12:07
காரைக்கால்: காரைக்காலில் மாங்கனித் திருவிழா முன்னிட்டு நேற்று பிக்ஷாடனமூர்த்தி வெள்ளை சாந்தி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.
காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜையுடன் மாப்பிளை அழைப்பு வருகிறது. நேற்று காலை முக்கிய நிகழ்ச்சியான பரமதத்தர் மற்றும் காரைக்கால் அம்மையார் திருக்கல்யாண உற்சவம் மிக விமரிசையாக நடைபெற்றது. அதை தொடர்ந்து கைலாசநாதர் கோவிலில் இரவு பிக்ஷாடன மூர்த்தி வெள்ளை சாந்தி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. இது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று 15ம் தேதி பிக்ஷான மூர்த்தி மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் தீபாராதனை நடை பெற உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.